" I come from a country and a civilization that given the universal word. That word is preceded by silence, followed by more silence. That word is 'Ohm.' So I dedicate this award to my country."
- Sound Mixing காக ஆஸ்கர் வாங்கிய ரெசூல் பூக்குட்டி யின் ஏற்புரை இது. ஒலி தொடர்பான தொழிலில் ஒலியின் ஆதாரமான "ஓம்" எனும் ஓங்காரத்தை இவர் குறிப்பிட்டு பேசியது மிகப்பொருத்தம்.
"ஓம்" என்பது ஒரு எழுத்து, இது அ, உ, ம எனும் ஒலிகளை உள்ளடக்கியது. சூரியன், சந்திரன், அக்னி எனும் ஒளி வடிவங்களும் இதனுள் அடங்கும். ஓம் எனும் பிரணவத்திலிருந்தே எல்லா ஒலி, ஒளி வடிவங்களும் உண்டாயின.
ஓங்காரம் எனும் பிரணவத்தினை, உலகினை தன்னுள் அடக்கிய, அமைதியாலும் பேரமைதியாலும் சூழப்பட்ட ஒலியினை, உலகுக்கு வழங்கிய நாட்டிலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பவன் என்று தன்னை அறிமுகப்படுத்திய விதம் கண்டு ஓர் இந்தியனாய் பெருமிதம் கொள்கிறேன்.
"ஓம்" - என்பது ஒலியின் ஆதாரம் என்பதனையும் தாண்டி அது இந்து சமயத்தின் புனித குறியீடு. உலக அரங்கில் அப்புனித ஒலியை உலகுக்கு அளித்த சமுதாயத்திலிருந்து, நாகரீகத்திலிருந்து வந்திருப்பதாக பெருமைபட கூறிய இவர் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். இதுவல்லவோ பாரதத்தின் சிறப்பு?
இச்சிறப்பின் இறப்புக்கு கங்கணம் கட்டும் சில தீயோரின் தீய சக்திக்கு எதிராக நல்ல உணர்வினை, நாட்டு பற்றினை, நல்லோர் மனதில் உண்டாக்கும் விதமான இந்த பேச்சுக்கு தலை வணங்குகிறேன்.
பூக்குட்டி உங்களுக்கு என் இதயப் பூக்களால் கோர்க்கப்பட்ட பூங்கொத்தினை பரிசாக்குகிறேன். எனக்கு முதல் ஆஸ்கார் வாங்கித்தந்ததற்காக!
பொதுவாக எனக்கு ஆங்கில பாடல்கள் பிடிப்பதில்லை. ஏனென்றால் என்ன பாடுகிறார்கள் என்று புரிவதில்லை. புரியாத விஷயமாக இருந்ததால் அதன் மீது ஓர் வெறுப்பினை வளர்த்திருந்தேன். இசை என்பதன் இலக்கணம் இந்தியருக்கே தெரியும் என்றொரு தலைக்கணம் கொண்டிருந்தேன். ஆங்கில இசை இலக்கணப் பிழை என்று எனக்கோர் எண்ணம்.
இப்படியெல்லாம் பிழையாய் எண்ணங்கள் கொண்டிருந்த நான் அன்றெல்லாம் ஓர் பக்குவப்பட்ட இசை இரசிகனாய் இருந்திருக்கவில்லை. இசையை விடவும் அதிகமாய் இளையராஜாவை இரசித்துக்கொண்டிருந்த காலம். இளையராஜாவை இரசிப்பது என்றால் மற்ற இசையமைப்பாளர்களை மட்டம் தட்டுவதே என்று தானாக ஓர் சட்டம் இயற்றி அதை செயல்படுத்திக் கொண்டிருந்த ஓர் செவிட்டு இரசிகனாய்தான் நான் இருந்தேன்.
திரைப்படங்களில் நல்ல பாடல்களுக்கு பஞ்சம் வர, திடீரென டி.வி விளம்பர பாடல்கள் சில அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் துவங்கியது. அப்படி சில பாடல்கள் நாம் அறியாமலேயே நம்மை முணுமுணுக்கவும் வைத்தது.
அப்படியிருந்த காலத்தில் ஓர் நாள், 1992ம் வருடம் என்று நினைக்கிறேன். கோயம்பத்தூர் ஸ்ரீ லட்சுமி காம்ப்ளெக்ஸ் உள்ளே வேடிக்கை பார்த்து நடந்துகொண்டிருந்த போது, ஒரு கேசட் கடையிலிருந்து வந்த இசை என்னை ஈர்த்தது. மேற்கத்திய இசைபோல் இருந்தாலும்.. அற்புதமாக இருந்த அந்த இசை என்னை சுண்டி இழுக்க எங்கும் நகராது அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தேன், ஆங்கில வார்த்தைகளில் பாடல் ஆரம்பிக்கும் என்று எதிர்நோக்க என்னை ஆச்சர்யத்தில் தள்ளிவிட்டு தமிழில் பாடல் வரி துவங்கியது...
"புது வெள்ளை மழை இங்கே பொழிகின்றது" - என்று துவங்கிய அந்த பாடலிலிருந்து பொழிந்த அந்த தேனிசை மழையில் நனைந்துருகிய நான் அப்படியே அந்த கேசட் கடைக்குள் நுழைந்து "இது எந்த படத்து பாடல்? யார் இசை?" - என்று வினவினேன்.
"மணிரத்தினத்தின் அடுத்த படம் ரோஜா! யாரோ ஒரு புது பையன் போட்டிருக்கான் பாட்டெல்லாம் வித்தியாசமா இருக்கு... அருமையா இருக்கு" -- என்று கடைக்காரர் கூற, அப்போதே ஒரு கேசட் குடுங்க என்று கேட்டு வாங்கி நேராக வீட்டிற்கு வந்தேன்.
"சின்ன சின்ன ஆசை", "புது வெள்ளை மழை", "ருக்குமணி.. ருக்குமணி", "காதல் ரோஜாவே", "தமிழா தமிழா" - என ஒவ்வோர் பாடலும் அற்புதம், அத்தனை ஆனந்தம். "சுண்டி இழுக்கும் இசை" - என்பார்கள், உண்மையில் என்னை சுண்டி இழுத்தது ரஹ்மானின் இசை.
இப்படி அறிமுகமான இந்த ரஹ்மான் தான், எனக்கு இரண்டு ஆஸ்கார் விருது வாங்கித்தருவார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இன்று இந்தியாவில் ஒவ்வொரு இசை இரசிகரும் ஆஸ்கர் வாங்கி இருக்கிறோம். அந்த கலைஞன் வாங்கிய விருது அவனுக்கு மட்டும் சொந்தம் அல்லவே, அவன் இரசிகர்களுக்கும் தானே... ஆகவே ஒவ்வோர் இசை இரசிகனும் இன்று ஆஸ்கர் வாங்கியவனே! ஆகவே உங்களுக்கும் எனக்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள்!
திரைபடத்தினை பொருத்தவரை ஆஸ்கர் பெரிய விஷயம் இல்லை, பெரிய விருதும் இல்லை என்பது விவரம் அறிய வந்த போது நான் அறிந்துகொண்டது. அனைத்து அமெரிக்க படங்களுக்கு நடுவில் ஒரே ஒரு "சிறந்த வெளி நாட்டு படம்" -- எனும் ஒரு விருது, அது மட்டுமே உலக சினிமாவுக்கு, மற்றவை அனைத்தும் அமெரிக்க படங்களுக்கு எனும் போது இது எப்படி உலகிலே உயர்ந்த விருதாகும்? ஆஸ்கர் ஹாலிவுட்டுக்குத்தான் தேவதை, நம் படங்களுக்கு அது தேவையில்லை!
ஆயினும், இப்போது நமக்கு கிடைத்திருக்கும் இந்த விருது சிறப்பானதும் பெருமைக்குரியதும் ஆகும் காரணம், ரஹ்மானும், பூக்குட்டியும் ஓர் அமெரிக்க படத்தில் வேலை செய்து அதில் சிறந்தவர்களாய் அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பதால், இவ்விருது சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல நமக்கு பெருமையும் தேடித்தருவதும் ஆகும்.
அமெரிக்கப் படங்களின் இசை வரிசையில் சிறந்த இசையாக, ஓர் இந்தியனால், இந்திய தனித்தன்மையோடு அமைக்கப்பட்ட இசை, சிறந்த இசை என்று அமெரிக்கர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் விஷயமே இங்கே சாதனை ஆகும்.
மற்றபடி, உலக அங்கீகாரம் கிடைக்காது போனாலும், பல சாதனைகளை ரஹ்மானும், இளையராஜாவும், இரவீந்திரனும், பர்மனும், நெளஷாதும், எம்.எஸ்.விஸ்வநாதனும், மஹாதேவனும், குமாரும், பாபுராஜும் இன்னும் எண்ணற்ற கலைஞர்களும் செய்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்....இருக்கிறார்கள்.
"ஜெய் ஹோ" - பாடல் சிறந்த பாடல், ஆனால் அது தலை சிறந்த பாடலன்று. இது எல்லா பக்குவமான இரசிகர்களும் ஒத்துக்கொள்ளும் விஷயம். பம்பாய் - படத்தின் தீம் மியூசிக், கருத்தம்மாவில், "சின்ன உசிரை முடிச்சிடு" - என அந்த பச்சிளங் குழந்தையின் தந்தை கூற, கள்ளி வெடித்து பால் வர, பிண்ணனியில் மனதை உருக்கும் குரலில் "காக்கா எளப்பார" -- என துவங்கும் பாடல்களை விட சிறந்ததில்லை "ஜெய ஹோ!" ஆயினும், அமெரிக்கரை திரும்பி பார்க்க வைத்த விதத்தில் அது சிறந்தது.
"சிறப்பு" என்பதற்கு நமதான வரையரை இதற்கும் பன்மடங்கு மேல் எங்கோ நம்மால் வரையறுக்கப் பட்டுள்ளது. ஆகவே, இது சாதனையின் உச்சமல்ல. ரஹ்மானும், பூக்குட்டியும், இன்னும் திறமை வாய்ந்த நம் கலைஞர்கள் அனைவரும் அடையவேண்டிய உச்சம் இன்னும் இருக்கிறது.
கொடைகானல் அற்புத அழகு நிறைந்த இடம், கொடைக்கானல் போகும் வழியில் ஏதேனும் ஒரு கொண்டை ஊசி வளைவில் ஒரு அருமையான இயற்கை காட்சி தென்படும், வண்டி நிறுத்தி நாமும் பத்து நிமிடம் அதை இரசித்து போகலாம். அப்படி ஒரு கொண்டை ஊசி வளைவு இன்பமே இந்த ஆஸ்கர். கொடை யின் அழகு எனும் ஆனந்தம் இன்னும் மேலே இருக்கிறது, இந்த கொண்டை ஊசி அற்புதத்தில் திருப்தியடைந்து வண்டியை வீட்டுக்குத் திருப்பிடக் கூடாது.
அத்தனை பிரபலங்கள் கூடியிருந்து உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் நிகழ்ச்சியின் மேடையில் நம் தாய் மொழி தமிழும், தேச மொழி ஹிந்தியும் ஒலித்தது கூடுதல் சிலிர்க்க வைத்த சிறப்பு.
பூக்குட்டியையும், ரஹ்மானையும் மனதார வாழ்த்தி பாராட்டுவோம். ஒவ்வோர் இந்தியனுக்கும் பெருமை இன்று. பெருமை கொண்ட ஒவ்வோர் இந்தியனும் மகிழ்ந்திருப்பான், ஒவ்வோர் இந்தியனும் மகிழ்வதால் நாடே மகிழ்ச்சியில் திகழ்கிறது, மகிழ்வான நாடு சுபிக்ஷமாய் இருக்கும். நாட்டை சுபிக்ஷமாக்கிய இவ்விருவருக்கும் மீண்டும் நன்றியும் பாராட்டுகளும்.
இந்த அற்புத தருணத்தில் இரசிகர்களாகிய நாம் ஒரு படியேனும் மேலே உயர்வோம். ஒருவரை தாழ்த்துவதன் மூலம் மற்றவரை உயர்த்தும் ரசனையை கை விடுவோம். ஒரு கலைஞனின் இரசிகன் எனும் பெயரில் மற்றோர் கலைஞன் தரும் அற்புத படைப்பினை உதாசீனப்படுத்தும் இயல்பினை களைவோம். கலைஞன் மேல் மரியாதை மாத்திரம் வைத்து கலைக்கு மாத்திரம் தீவிர ரசிகர் ஆகுவோம்.
இசையை பொருத்தவரை, நம்மை இசையச்செய்யும் எந்த ஓசையும் அற்புத இசையே! அப்படி ஓர் இசைக்கு ரசிகராய் இருப்போம்.
ரெசூல் பூக்குட்டிக்கும், ரெஹ்மானுக்கும், அனைத்து இந்தியருக்கும் இரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க பாரதம்... வளர்கிறது பாரதம்!
Monday, February 23, 2009
Friday, January 2, 2009
புத்தாண்டு வாழ்த்து!
பழைய வருடங்கள் போதித்த பாடங்கள்
புதிய வருடத்தில் பண்பெற வழிகாட்டி!
பழைய வருடத்தில் ஏமாற்றம் வலித்திருக்கும்
புதிய வருடத்தில் [வலியுறா] பக்குவம் வளர்!
பழைய வருடத்தின் மகிழ்ச்சியின் தருணத்தை
புதிய வருடத்தின் துயர் நேர மருந்தாக்கு!
பழைய வருடத்தில் நண்மைகள் புரிந்தாய்
புதிய வருடத்தில் பழக்க மென்றாக்கு!
பழைய வருடத்தில் தீதும் செய்தாய்
புதிய வருடத்தில் தொடராது தவிர்!
பழைய வருடத்தில் தவறுகள் நேர்ந்தது
புதிய வருடத்தில் எண்ணிக்கை குறை!
பழைய வருடத்தின் வேண்டாத கசப்புகள்
புதிய வருடத்தில் காணாமல் செய்!
பழைய வருடத்தில் தோல்விகள் கண்டாய்
புதிய வருடத்தில் பயில் முயல்!
பழைய வருடத்தின் வெற்றிகள் பற்றி
பஞ்சாங்கம் பாடாது எண்ணிக்கை கூட்டு!
பழைய வருடத்தின் நிறைவேறா கனவு
புதுவர்ணம் பூசி புதிதாக காண்!
பழைய வருடத்தின் தன்னம்பிக்கை எல்லாம்
புதிய வருடத்தில் பன்மடங்காக்கு!
பழங்காலம் தந்த நட்புகள் சிறந்தவை
காலம் உண்டாக்கும் உறவுகள் உயர்ந்தவை
எக்காலாத்தும் இதனை பேணி நீ காத்திடு!
கசப்பான வாழ்விலும் மாறாத புன்னகை
தன் நிலை பாராது உதவிக்கு ஒரு கை!
புது வருடத்தின் கொள்கையாய்
இவற்றினை கடைபிடி!
அனைவருக்கும் சில்வண்டின்,
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Monday, December 29, 2008

சில்வண்டின்..,
முதற்காதல் - பதினாறாம் நினைவு !
என்
முதற் காதலே!
ஆண்டுகள்
பதினாறு
ஆயிற்று
இன்றோடு!
நீ இறந்து!
உன்மேல் காதல்
எனக்கு பிறந்து!
--- 0 ---
மதிபோல்
மலர் முகம்
என்
மதியில்
மகரந்தம் தூவ!
மயங்கி
மருகி!
ஊடுறுவி
உருகி!
இமை கொட்டாது
உன் முகம்
பார்த்தேன்!
உணர்வுகளின்
ஊற்று!
உற்பத்தியாயிற்று!
--- 0 ---
--- 0 ---
அங்கங்கள்
ஒவ்வொன்றும்
அழகுக்கு
அர்த்தங்கள்!
அங்கங்கு
தங்கி நான்
ஆராய்ந்தேன்
அதில்
ஆழ்ந்தேன்!
செவி தந்தால்
ஒன்றிரண்டு
இரகசியமாய்
சொல்லிடுவேன்!
பூத்தார்போல்
புன்னகைப்பாய்!
அவ் வழகுக்காய்
விழைகின்றேன்!
--- 0 ---
ஒரு புருவம் மேலுயர்த்தி
வினாக்குறி என்றாக்கி
ஆராய்ந்த தென்னவென்றா
கண்ணாலே கேட்கின்றாய்?
குறும்பே!
அத்தனையும் கூறிவிடின்
வெட்கத்தில் வெளறிடுவாய்!
"ச்சீ " - யென்று பொய்யாக
சினம் கொண்டு சிவந்திடுவாய்!
உன் ரசிப்பை
நான் ரசிக்க
ஒன்றிரண்டு உரைத்திடவா?
--- 0 ---
பாற்கடல் சூழ
கருங்கடல் கொண்டு
அழகு சேர்த்திடும்
ஆழி இரண்டு!
அலையாய் இருள்
அலையாய் இடை
சாடும் நீர்வீழ்ச்சி!
பழம் முந்தி
வரும் விதையாய்
வனப்பாய்...
இரு
வாசல் குகை ஒன்று!
ரசம் தன்
ஈரப்பதம் நிறை
கீறி வெடித்த செங்கனி!
அதில்
பக்கவாட்டு
மின்னல் கீற்று!
பட்டாடை
போர்த்தி
பொதிந்து வைத்த
பஞ்சு மெத்தை
ரெண்டு பக்கம்!
என நான்
கண்டதெல்லாம்
அருங்காட்சி!
என் கண்களெல்லாம்
அதன் சாட்சி!
--- 0 ---
நான் கூறும்
எழில் யாவும்
உன் அழகில்
சொச்சம் மட்டும்!
நீ
அறிய
இவை போதும்!
மிச்சமெல்லாம்
எனக்கு மட்டும்!
அநியாயம்
என்றெல்லாம்
அங்கலாய்ப்பு
தேவையில்லை!
அழகெல்லாம்
உனதாயினும்
ரசனை யாவும்
எனதன்றோ?
--- 0 ---
தாரகையாய்
மேல் நின்று
இப்போதும்
புன்னகைப்பாய்!
என் காதல்
உணர்ந்தாயா
என கேட்டால்
நீ சிரிப்பாய்!
பாதி கிணறு
தாண்டிவிட்டேன்
மறு பாதி ஓடிவிடும்!
விரைந்தோடி
வந்திடுவேன்!
உன்
கன்னத்தில்
ஆழ் முத்தம்
பதித்தெடுக்க!
December 29, 2008
Tuesday, November 20, 2007
போக்கிரி வண்டு!
வணக்கம்!
பசித்திருந்த ஒரு மதிய வேளையில் இசை கேட்டிருந்தது வண்டு!
"போக்கிரி" படத்தின் "டோலு டோலு தான் அடிக்கறா" என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கினை தாக்க.. இந்த மெட்டுக்கு பொருந்துமாறு சில வரிகள் வந்து விழுந்தது...!
"வாசம் வாசமா வருகுதா - என்
சுவாசம் மொத்தமும் மணக்குதா
வயிறும் காஞ்சு தான் கிடக்குதா - கொஞ்சம்
கஞ்சி கேட்டு தான் துடிக்குதா?
சில வகைகள் மட்டும் தான் கிடைத்திடுமே வீட்டில்
பல வகையில் பண்டங்கள் கிடைக்குமிடம் ஹோட்டல்!
ஊத்தி அவிச்சது இட்லியா - அதை
பரப்பி சுட்டது தோசையா!
பொறித்து எடுப்பது பூரியா - அந்த
உருளை கிழங்கு Gas தொல்லை!
அடடா அடடா அட அடை இது தாண்டா!
குடுடா குடுடா நீ சுட சுட போண்டா!
இடுடா இடுடா வடை ரசத்தினில் இடுடா
ஊறி திளைக்கும் அது ரசவடை தாண்டா! "
இப்படி சில வரிகள் பல்லவிக்கு வந்து விழுந்த நிலையில் இந்த பாடலை முழுமையாக்க நினைத்த வண்டு எழுதிய சரணங்கள் கொஞ்சம் காதல் சில்மிஷத்துடன் அமைந்திட்டது.
சில்மிஷ சரணத்துடன் பசி பல்லவி ஒட்டவில்லை. பசியின் அவதியை விட காதல் சில்மிஷங்கள் சுகம் தானே? ஆகையால் அந்த சரணத்தோடு ஒட்டாமல் இருந்த இந்த பல்லவியை மாற்றி கொஞ்சம் காதல் சில்மிஷம் கொஞ்சம் அறிவுரை என்பது போல் இப்பாடலை வடிவமைத்தது வண்டு!
இனி பாடல்...!
பல்லவி 1:
ஆ: [டாலு டாலு போல் இருக்கிறா..]
Doll-லு Doll-லு போல் இருக்குறா - புது
Feel-லு Feel-லு தான் கொடுக்குறா!
Sugar ஏற ஏறத்தான் சிரிக்கிறா - இந்த
பிகரு ஆளையே உருக்குறா!
பெ: இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும் சோலை!
அந்த பூவை வாடாது காத்திருக்கும் சேலை!
குழு: பூக்கள் வாசம் தான் சிறந்ததா - இந்த
பெண்கள் வாசம் தான் சிறந்ததா?
சகவாசம் இவளுடன் தோன்றினால்
சுகவாசம் கிடைத்திடக் கூடும்!
ஆ: அழகு அழகு இவள் அசைவது அழகு
பழகு பழகு நீ பரிவுடன் பழகு
இறகு இறகு மனம் மெல்லிய இறகு
இறங்கு இறங்கு நீ இதயத்தில் இறங்கு!
சரணம் 1:
பெ: பொழிந்திடும் மழையில் நனைந்திடும் பொழுதில்
சுட சுட தேநீர் சுகம் தானே!
கொதித்திடும் வெயிலில் வறண்டிடும் பொழுதில்
இளநீர் இதம் தானே!
ஆ: வியர்வையின் மழையில் விரல்களுக் கிடையில்
சிறு தொடல் சுகம் தானே!
கொதித்திடும் மனதில் தகித்திடும் உணர்வில்
இதழ் நீர் இதம் தானே!
பெ: நீ அனைத்தும் எடுக்க!
நான் அளந்து கொடுக்க!
முன்பு வழுகி விலக!
பின்பு பழகி பருக!
சரணம் 2:
ஆ: தாளிக்கும் வாசம் பரவிடும் போது
பசித்திடும் எண்ணம் வரும் போலே!
தாவணி பெண்ணை பார்க்கையில் காதற்
பசி அதை கண்டேனே!
பெ: உலையினில் அதிகம் இருந்திடும் சாதம்
குழைந்திடும் அது போலே!
நிலையினில் நில்லா திருந்திடும் பருவம்
பிழையென்று ஆகிடுமே!
விளைவு அறிந்து!
இடை வெளியில் பழகு!
நீ சமயம் அறிந்து!
தீ அணைத்துப் பழகு!
[இந்த பாவை பூவுடல் பூத்திருக்கும்....]
சில்வண்டு!
Nov 20, 2007
Thursday, November 1, 2007
Not Interested in Movies - னு சொன்னா?
"Not Interested in Movies" என்பது சிலரின் கூற்று!
அதில் அர்த்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. திரைப்படங்களை மிகவும் விரும்பும் இந்த வண்டு என்பதால். திரைப்படங்கள் சார்பாக வாதாட பீஸ் இல்லாத வக்கீலாக ஆஜர் ஆகுகிறது வண்டு.
ஏதொரு விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் உண்டு. அந்த காரணம் அறியாமல் உண்டாகும் விருப்பும் வெறுப்பும் அர்த்தமற்றது. [பின்னுகிறேனா?]. Not Interested in Movies என்று கூறுவது நான் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று காட்டிடத்தானோ? [மிளகாய் பொடி தூவி சிலரின் கோவத்தை கிளறுகிறேனா?]. சரி, ஏன் Not Interested என்று கேட்டால் அதற்கும் பதில் கூற சிலரால் முடிவதில்லை [சே.. சே.. யாரையும் நான் குத்தி காட்டலேங்க...!]
திரைப்படத்தை விடுங்கள் அந்த திரையிலேயே ஒரு மாபெரும் செய்தி அடங்கியுள்ளது. நல்லதாயினும், கெட்டதாயினும், காட்டப்படுவது எதுவாயினும் திரை தன் நிலை மாறுவது இல்லை. அது அதுவாகவே இருக்கிறது. [இதுல என்ன சேதினு கேக்காதீங்க... ஒரு விஷயத்தை சொன்ன அனுபவிங்க.. ஆராயாதீங்க!]
திரைப்படங்கள் மனிதனை அல்ல மனங்களை படம் பிடிப்பவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பொருத்தவரையில் ஒரு சரி உண்டு, ஒரு தவறு உண்டு. ஒருத்தரின் சரி, மற்றவர்க்கு சரிப்படாதபோது அது அவர்க்கு தவறாய் தோன்றுகிறது. அப்போது பிரச்சினைகள் உண்டாகிறது.
அடுத்தவரின் நிலையில் இருந்து சிந்தித்தால் தவறாய் நமக்கு தோன்றுவதில் ஏதோ ஒரு சரி இருப்பதாக தோன்றும். ஆகையால் தான் சில கொலையாளிகளின் கதைகள் கூட நம் மனதை தொட்டுச் செல்கிறது.
கதை கேட்டல் - முக்கியமான ஒன்று. குழந்தை பருவத்தில் பாட்டியும் அம்மாவும் கூறும் கதைகள் பிள்ளைகளில் நற்பண்பை நல்லொழுக்கத்தை வளர்த்தது. கடவுள் மேல் பக்தி உண்டானதெல்லாம் கடவுள் குறித்த கதைகள் கேட்டுத்தானே?
ஒரு கலாச்சாரத்தை ஒரு வாழ்கை முறையை புரியவைக்க, அதை இரசிக்கவைக்க திரைப்படங்கள் போல் வேறு எதனாலும் ஆகாது. கிராமத்தை புரிய வைத்த பாரதிராஜாவின் படங்கள், சமூகத்தின் இருண்ட பாகங்களை வெளிச்சம்போட்டு காட்டிய பாலசந்தர் படங்கள், பாரதியை பற்றியும், பெரியார் பற்றியும் அறிந்திராத பல விஷயங்களை படம் பிடித்து காட்டிய ஞானசேகரன் படங்கள் என்று கூறிக்கொண்டே போகலாம்.
எந்த ஒரு விஷயத்திற்கும் மறுபக்கம் உண்டு என எனக்கு போதித்தது திரைபடங்களே! ஒரு சேதியும் சொல்லாமல் சிரிக்க மட்டும் என்று உருவாக்கப்படும் சிரிப்பு படங்களாகட்டும், மனிதனால் முடியாமல் போகும் விஷயங்களை முடிவது போல் காட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும், கற்பனையில் மட்டுமே சாத்தியமாகும் பிக்ஷன் ஆகட்டும், ஏதோ ஒரு விதத்தில் மனதின் உணர்வுகளை தட்டிச்செல்வது நல்ல படங்களின் தண்மை.
பெரும்பாலும் குப்பையாக இருக்கும் படங்கள் காரணமாக ஒட்டு மொத்த திரைப்படங்களை உதாசீனப்படுத்துவது தகுமா?
நம் உணர்வுகளோடு உறவு கொள்ளும் எதையும் உதாசீனப்படுத்துதல் நியாயமல்ல. திரைப்படங்கள் நம் உணர்வுகளோடு உறவாடுபவை. அதனை உதாசீனப்படுத்தவேண்டாம். இனியேனும்!
சில்வண்டு!
Friday, September 21, 2007
!!!DREAM GIRL!!!
என் DREAM GIRL!!!
யார் அவள்? எப்படி இருப்பாள்?
பேரழகு இல்லை அவள்
களை மிகுந்த முகத்தவள்
மஞ்சள் அழகியல்ல
மா நிறத்தில் ஜொலிப்பவள்!
இடி மழை மின்னலுக்கு
கரப்பான் பூச்சிக்கு
பயந்தலறும் பெண் ஆவாள்!
எதிர்பாரா நேரத்தில்
மாபெரும் பிரச்சினையில்
தைரியம் காட்டி அசரவும் வைப்பாள்!
என் சின்ன கொஞ்சல் மொழிக்கு கூட
வெட்கம் தாளாது துவளும் பெண்!
சில நேரத்தில் கொஞ்சலில் கெஞ்சலில்
என்னையும் மிஞ்சும் பெண்!
"என்னமோ தெரியல அழுகைய வருது" - என
என் மார்பில் சாய்ந்து குழந்தை போல் அழுவாள்!
நான் தளர்ந்து போனேன் என்றால் - என்
கை பற்றி கண் நோக்கி
அணைத்தெனக்கு ஆறுதல் தருவாள்!
காரணம் இன்றி கோபிப்பாள் - பின்
மன்னிக்கவேண்டி பின்னே அலைவாள்!
கோபிப்பது நான் என்றானால்
சமரசம் கொள்ள சம்மதிக்காதிருப்பாள்!
அவள் அமைதியானவள்! - பத்து
வாயில் பேசும் வாயாடியும் அவள்!
இசையில் லயிப்பவள் என் உள்ளத்தில்
இசையாய் இருப்பவள்!
சாந்த சொரூபி படபடக்கும் பத்திரகாளி!
ரசிகை ராட்க்ஷசி!
தேவதை தாரகை குயில் மயில் - என்
குட்டி குரங்கு செல்லக் கழுதை என
எல்லாமும் ஆனவள்!
ஒவ்வொரு செய்கையிலும்
அன்பை பொழிபவள்!
ஸ்நேகம் ஸ்நேகம் ஸ்நேகம்
எனை ஸ்நேகத்தில் கொல்பவள்!
மொத்தத்தில்
இவள்!
என் சகியானவள்என்
சகோதரியானவள்
தாயுமானவள் - அவள்
நானும் ஆனவள்!
என் கனவுக்கு வர்ணம் பூசும்
இந்தப் பேரழகி
பிறந்தது என்
கற்பனாபுரத்தில்!
வசிப்பது இதயத்தின்
அந்தப்புரத்தில்!
-Sep 21, 2007
யார் அவள்? எப்படி இருப்பாள்?
பேரழகு இல்லை அவள்
களை மிகுந்த முகத்தவள்
மஞ்சள் அழகியல்ல
மா நிறத்தில் ஜொலிப்பவள்!
இடி மழை மின்னலுக்கு
கரப்பான் பூச்சிக்கு
பயந்தலறும் பெண் ஆவாள்!
எதிர்பாரா நேரத்தில்
மாபெரும் பிரச்சினையில்
தைரியம் காட்டி அசரவும் வைப்பாள்!
என் சின்ன கொஞ்சல் மொழிக்கு கூட
வெட்கம் தாளாது துவளும் பெண்!
சில நேரத்தில் கொஞ்சலில் கெஞ்சலில்
என்னையும் மிஞ்சும் பெண்!
"என்னமோ தெரியல அழுகைய வருது" - என
என் மார்பில் சாய்ந்து குழந்தை போல் அழுவாள்!
நான் தளர்ந்து போனேன் என்றால் - என்
கை பற்றி கண் நோக்கி
அணைத்தெனக்கு ஆறுதல் தருவாள்!
காரணம் இன்றி கோபிப்பாள் - பின்
மன்னிக்கவேண்டி பின்னே அலைவாள்!
கோபிப்பது நான் என்றானால்
சமரசம் கொள்ள சம்மதிக்காதிருப்பாள்!
அவள் அமைதியானவள்! - பத்து
வாயில் பேசும் வாயாடியும் அவள்!
இசையில் லயிப்பவள் என் உள்ளத்தில்
இசையாய் இருப்பவள்!
சாந்த சொரூபி படபடக்கும் பத்திரகாளி!
ரசிகை ராட்க்ஷசி!
தேவதை தாரகை குயில் மயில் - என்
குட்டி குரங்கு செல்லக் கழுதை என
எல்லாமும் ஆனவள்!
ஒவ்வொரு செய்கையிலும்
அன்பை பொழிபவள்!
ஸ்நேகம் ஸ்நேகம் ஸ்நேகம்
எனை ஸ்நேகத்தில் கொல்பவள்!
மொத்தத்தில்
இவள்!
என் சகியானவள்என்
சகோதரியானவள்
தாயுமானவள் - அவள்
நானும் ஆனவள்!
என் கனவுக்கு வர்ணம் பூசும்
இந்தப் பேரழகி
பிறந்தது என்
கற்பனாபுரத்தில்!
வசிப்பது இதயத்தின்
அந்தப்புரத்தில்!
-Sep 21, 2007
Tuesday, August 14, 2007
சுதந்திர நன்நாள்!
அறுபது ஆண்டு ஆயிற்று. நாம் சுதந்திரம் பெற்று.
சுதந்திர நன்நாளில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்? விடுமுறை நாள் என்பதையும் தாண்டி எந்த விதத்தில் இந்த நாள் நம்மில் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது? இவை யாவும் சிந்தனைக்குறிய கேள்விகளே!
அறுபது ஆண்டு சுதந்திர பாரதத்தில் மக்களின் இன்றைய நிலை என்ன? நாட்டின் நிலையும் தான் என்ன?
அறுபதாண்டுகளாய் அழித்துக்கொண்டிருக்கிறோம் வறுமைக்கோடு இன்னும் அழிந்தபாடில்லை. அறுபதாண்டுகளாய் நாமே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறோம், உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை கூட அனைவருக்கும் கிட்டியபாடில்லை. கல்வியில், மருத்துவ வசதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநிலை என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. சீனியர் சிட்டிசன் என அறியப்படும் முதியோருக்கு போதிய பாதுகாப்பு? என்பதில் அக்கறையும் அறவே இல்லை!
நம்மை நாமே ஆளும்போதும் ஏன் இன்னும் அவல நிலை? இதற்க்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? மக்களா? ஆட்சியாளர்களா? சிந்திக்கையில் அனைவரும் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஓட்டு, ஆட்சி, பதவி என்று ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நாடு, அதன் நலன், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலம் இவைகளை மட்டுமே மனதில் கொண்டு, இவைகளுக்காக உண்மையான அக்கறை கொள்ளும் ஓர் தலைவர் என்று யாரை நம்மால் இன்றைய கால கட்டத்தில் இனம் காட்ட இயலும்?
எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் தேச பக்தர்கள் எத்தனை பேர்? அடுத்து வரும் தேர்தல் என்பதை தாண்டி சிந்திக்கும் தலைவர்கள் எவரேனும் உளரா?
தலைவர்களை விடுவோம். மக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? "நம்மால் என்ன செய்ய இயலும்?" - எனும் கேள்வியை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நம்மால் வேறு பயண் இல்லை.
"கூட்டத்திற் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி.." - என்று பாடினான் பாரதி. இன்று நாம் அனைவரும் அப்படித்தான் இருக்கிறோம்.
பாரதி பாடிய காலத்திலோ, நல்வழி காட்டும் தலைவனின் பாதையில் பயணிக்க, போராட, நாட்டிற்காக குருதி சிந்த லட்சோப லட்சம் மக்கள் இருந்தனர். ஆனால் இன்று மதம் கலக்காத பொதுவான காரணத்திற்கு போராட, தியாகம் செய்ய எத்தனை பேர் முன்வருவார்?
ஒரு தலைவன் என்பவன் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் காந்தி அடிகள். வெறும் கொள்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை அதன் படி அவர் வாழ்ந்தும் காட்டினார். தன் கழிவறையை தாமே சுத்தம் செய்தார். அதை கண்டு அவரது சீடர்கள் பலரும், கழிவறைகளை தாமே சுத்தம் செய்தனர். இன்றைய காலத்தில் காந்தி இருந்து அவ்வாறு செய்வாராயின் அவரை அழைத்து வந்து நம் கழிவறையையும் சுத்தம் செய்யுமாறு கூறவும் நாம் தயக்கம் கொள்ள மாட்டோம் என்பதில் கடுகளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.
நம் இதயச்சுவர் ஏன் இத்தனை தடிமன் ஆகிப்போனது? நம் மனோபாவங்கள் மாறிப்போக காரணம் என்ன? வரலாற்றை பொறுத்தவரை 100 ஆண்டுகள் என்பது மிகச்சிறிய காலமே. அப்படியிருக்க சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்குள் அது ஒரு விடுமுறை தினம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு ஆளாக காரணம் ஏதுவாக இருக்கும்? இவை யாவும் ஆராய்ச்சிக்குறியவை.
சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நாம் சுதந்திரம் குறித்து அறிந்து கொண்ட விதத்தில் தான் முதல் கோணல் நடந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது.
"1947 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, ஜவஹர்லால் நேரு நம் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஆவார். காந்தி அடிகள் சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்" - என்றெல்லாம் பரீட்சைக்காக உரக்கப் படித்து மனப்பாடம் செய்த செயலில் தான் நாம் நம் நாட்டு சுதந்திர வரலாற்றினை கற்றுக்கொண்டோம்.
சுதந்திரம் என்பது அதன் உணர்வோடு அல்லது அதன் தாக்கத்தோடு நமக்கு போதிக்கப்படவில்லை. ஆண்டாண்டுகளாக ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒரே காரணத்திற்காக ஒன்றாக இணைந்து பாடுபட்ட அந்த உணர்வு வரும் தலைமுறைகளுக்கு சரியான ரீதியில் எடுத்துச் செல்லப்படவில்லை.
கடவுள், பக்தி போன்ற உணர்வுகள் தலைமுறைக்கு தலைமுறை மாயாமல் தேயாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டுப்பற்று, அதன் வரலாறு, அதன் பாரம்பரியம், பெருமை இவை யாவும் அங்கங்கே உதாசீனப் படுத்தப்பட்டுவிடுகிறது.
ஏன் அப்படி? இதற்கு காரணம் யாது? யார் இங்கே குற்றவாளி?
அனைவரும் தான். முக்கியமாய் ஆசிரியப் பெருமக்கள், நம் முந்தைய தலைமுறை பெரியோர்கள், அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தான் இதில் குற்றவாளிகள்.
பண்டைய காலத்திய அரசர்களையும் அவர்தம் பெருமைகளையும் படித்தது போன்றே சுதந்திரத்தையும் நாம் வெறும் பாடமாக மட்டுமே படித்தோம். இதோ நம் காலத்துக்கு மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இவை எனும் அதிர்ச்சி நமக்குள் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். இவை நமக்கு நம் நாட்டோடு உண்டான அணுகுமுறையை சிறந்ததாய் மாற்றிட உதவியிருக்கக் கூடும்.
நாட்டுப்பற்றை நோக்கி நம்மை அழைத்துச்செல்ல சிறந்த வழி மொழிப்பற்று ஆகும். கவனிக்க மொழிப்பற்று என்பது மொழி வெறி அல்ல. தாய் மீது உண்டாவது போல் அன்பு தாய்மொழி மீதும் இயல்பாய் உண்டாகும் நிலை வேண்டும். சகோதரர் மீது உண்டாகும் பாசம் போல் நம் தேசத்து பிற மொழிகள் மீது பாசமும் நமக்கு முக்கியமாய் உண்டாகிட வேண்டும்.
மொழி வசப்படாமல் ஏதும் கற்பது கடினமே! ஆகையால் மொழியாளும் திறன் வளர்த்தல் வேண்டும். மொழி, இலக்கியம், வரலாறு இது மூன்றும் ஆரம்ப பள்ளிகளில் மிக முக்கியமாக போதிக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் எல்லாம் சேர்ந்து சுதந்திரம் என்பதை ஒரு மாபெரும் சம்பவமாக நமக்கு உயர்த்தி காட்டத் தவறிவிட்டது எனலாம்.
அறுபதாம் ஆண்டில் நாம் மெல்ல மெல்ல நம் தனித்தண்மையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் வேறு விவாதம் தேவை இல்லை. கை கூப்பி சொல்லும் வணக்கம் கை தூக்கி சொல்லும் "ஹாய்" ஆகிவிட்டது. தமிழை ஆங்கிலத்தில் பேசுகிறோம். அமுதை அமிலத்தில் கலக்குவது பாவமன்றோ?
நம் தனித்தன்மையை விட்டு அடுத்தவர் முறைதனை ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம் நம் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஓர் தவறான பாதையில் வெற்றி நடை போடுகிறோம்.
நாம் யார் என்பது பற்றி அறியாமை, நம் மூதாதையர் பற்றி அறிந்துகொள்ளும் அக்கறையின்மை, நம்மை பற்றி ஓர் உயர் மதிப்பு நமக்கே இல்லாமை என்பவை தான் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு காரணம். கழுவும் நம் கலாச்சாரத்தை விட்டு துடைக்கும் ஓர் கலாச்சாரத்திற்கு நம்மை அடகு வைப்பது சரியா?
இனியேனும் சிந்திப்போம்! நாம் சுதந்திரம் பெற்ற அந்நாளில் மகாத்மா துக்கத்தில் இருந்தார். இன்றும் அவர் ஆன்மா துக்கித்து தான் இருக்கிறது. நூறாவது வருடத்திற்குள்ளாவது திருந்துவோம். அவர் ஆன்மாவை மகிழ்விக்க உறுதி பூணுவோம். சுதந்திர நாளை உளப்பூர்வமாய் உணர்வுபூர்வமாய் கொண்டாடுவேம். இந்தியத்தாயின் பெருமை போற்றுவோம்.
இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள்.
வந்தே மாதரம்!
சுதந்திர நன்நாளில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்? விடுமுறை நாள் என்பதையும் தாண்டி எந்த விதத்தில் இந்த நாள் நம்மில் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது? இவை யாவும் சிந்தனைக்குறிய கேள்விகளே!
அறுபது ஆண்டு சுதந்திர பாரதத்தில் மக்களின் இன்றைய நிலை என்ன? நாட்டின் நிலையும் தான் என்ன?
அறுபதாண்டுகளாய் அழித்துக்கொண்டிருக்கிறோம் வறுமைக்கோடு இன்னும் அழிந்தபாடில்லை. அறுபதாண்டுகளாய் நாமே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறோம், உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை கூட அனைவருக்கும் கிட்டியபாடில்லை. கல்வியில், மருத்துவ வசதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநிலை என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. சீனியர் சிட்டிசன் என அறியப்படும் முதியோருக்கு போதிய பாதுகாப்பு? என்பதில் அக்கறையும் அறவே இல்லை!
நம்மை நாமே ஆளும்போதும் ஏன் இன்னும் அவல நிலை? இதற்க்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? மக்களா? ஆட்சியாளர்களா? சிந்திக்கையில் அனைவரும் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஓட்டு, ஆட்சி, பதவி என்று ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நாடு, அதன் நலன், அடுத்த தலைமுறைகளின் எதிர்காலம் இவைகளை மட்டுமே மனதில் கொண்டு, இவைகளுக்காக உண்மையான அக்கறை கொள்ளும் ஓர் தலைவர் என்று யாரை நம்மால் இன்றைய கால கட்டத்தில் இனம் காட்ட இயலும்?
எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று கனவு காணும் தேச பக்தர்கள் எத்தனை பேர்? அடுத்து வரும் தேர்தல் என்பதை தாண்டி சிந்திக்கும் தலைவர்கள் எவரேனும் உளரா?
தலைவர்களை விடுவோம். மக்களாகிய நாம் என்ன செய்கிறோம்? "நம்மால் என்ன செய்ய இயலும்?" - எனும் கேள்வியை மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நம்மால் வேறு பயண் இல்லை.
"கூட்டத்திற் கூடி நின்று கூவி பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி.." - என்று பாடினான் பாரதி. இன்று நாம் அனைவரும் அப்படித்தான் இருக்கிறோம்.
பாரதி பாடிய காலத்திலோ, நல்வழி காட்டும் தலைவனின் பாதையில் பயணிக்க, போராட, நாட்டிற்காக குருதி சிந்த லட்சோப லட்சம் மக்கள் இருந்தனர். ஆனால் இன்று மதம் கலக்காத பொதுவான காரணத்திற்கு போராட, தியாகம் செய்ய எத்தனை பேர் முன்வருவார்?
ஒரு தலைவன் என்பவன் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர் காந்தி அடிகள். வெறும் கொள்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை அதன் படி அவர் வாழ்ந்தும் காட்டினார். தன் கழிவறையை தாமே சுத்தம் செய்தார். அதை கண்டு அவரது சீடர்கள் பலரும், கழிவறைகளை தாமே சுத்தம் செய்தனர். இன்றைய காலத்தில் காந்தி இருந்து அவ்வாறு செய்வாராயின் அவரை அழைத்து வந்து நம் கழிவறையையும் சுத்தம் செய்யுமாறு கூறவும் நாம் தயக்கம் கொள்ள மாட்டோம் என்பதில் கடுகளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.
நம் இதயச்சுவர் ஏன் இத்தனை தடிமன் ஆகிப்போனது? நம் மனோபாவங்கள் மாறிப்போக காரணம் என்ன? வரலாற்றை பொறுத்தவரை 100 ஆண்டுகள் என்பது மிகச்சிறிய காலமே. அப்படியிருக்க சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்குள் அது ஒரு விடுமுறை தினம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்ற நிலைக்கு ஆளாக காரணம் ஏதுவாக இருக்கும்? இவை யாவும் ஆராய்ச்சிக்குறியவை.
சுதந்திரத்திற்குப் பிறகான முதல் மற்றும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த நாம் சுதந்திரம் குறித்து அறிந்து கொண்ட விதத்தில் தான் முதல் கோணல் நடந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது.
"1947 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, ஜவஹர்லால் நேரு நம் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஆவார். காந்தி அடிகள் சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்" - என்றெல்லாம் பரீட்சைக்காக உரக்கப் படித்து மனப்பாடம் செய்த செயலில் தான் நாம் நம் நாட்டு சுதந்திர வரலாற்றினை கற்றுக்கொண்டோம்.
சுதந்திரம் என்பது அதன் உணர்வோடு அல்லது அதன் தாக்கத்தோடு நமக்கு போதிக்கப்படவில்லை. ஆண்டாண்டுகளாக ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒரே காரணத்திற்காக ஒன்றாக இணைந்து பாடுபட்ட அந்த உணர்வு வரும் தலைமுறைகளுக்கு சரியான ரீதியில் எடுத்துச் செல்லப்படவில்லை.
கடவுள், பக்தி போன்ற உணர்வுகள் தலைமுறைக்கு தலைமுறை மாயாமல் தேயாமல் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டுப்பற்று, அதன் வரலாறு, அதன் பாரம்பரியம், பெருமை இவை யாவும் அங்கங்கே உதாசீனப் படுத்தப்பட்டுவிடுகிறது.
ஏன் அப்படி? இதற்கு காரணம் யாது? யார் இங்கே குற்றவாளி?
அனைவரும் தான். முக்கியமாய் ஆசிரியப் பெருமக்கள், நம் முந்தைய தலைமுறை பெரியோர்கள், அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தான் இதில் குற்றவாளிகள்.
பண்டைய காலத்திய அரசர்களையும் அவர்தம் பெருமைகளையும் படித்தது போன்றே சுதந்திரத்தையும் நாம் வெறும் பாடமாக மட்டுமே படித்தோம். இதோ நம் காலத்துக்கு மிக சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் இவை எனும் அதிர்ச்சி நமக்குள் உண்டாக்கப் பட்டிருக்க வேண்டும். இவை நமக்கு நம் நாட்டோடு உண்டான அணுகுமுறையை சிறந்ததாய் மாற்றிட உதவியிருக்கக் கூடும்.
நாட்டுப்பற்றை நோக்கி நம்மை அழைத்துச்செல்ல சிறந்த வழி மொழிப்பற்று ஆகும். கவனிக்க மொழிப்பற்று என்பது மொழி வெறி அல்ல. தாய் மீது உண்டாவது போல் அன்பு தாய்மொழி மீதும் இயல்பாய் உண்டாகும் நிலை வேண்டும். சகோதரர் மீது உண்டாகும் பாசம் போல் நம் தேசத்து பிற மொழிகள் மீது பாசமும் நமக்கு முக்கியமாய் உண்டாகிட வேண்டும்.
மொழி வசப்படாமல் ஏதும் கற்பது கடினமே! ஆகையால் மொழியாளும் திறன் வளர்த்தல் வேண்டும். மொழி, இலக்கியம், வரலாறு இது மூன்றும் ஆரம்ப பள்ளிகளில் மிக முக்கியமாக போதிக்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் எல்லாம் சேர்ந்து சுதந்திரம் என்பதை ஒரு மாபெரும் சம்பவமாக நமக்கு உயர்த்தி காட்டத் தவறிவிட்டது எனலாம்.
அறுபதாம் ஆண்டில் நாம் மெல்ல மெல்ல நம் தனித்தண்மையை இழந்துகொண்டிருக்கிறோம் என்பது அப்பட்டமான உண்மை. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதில் வேறு விவாதம் தேவை இல்லை. கை கூப்பி சொல்லும் வணக்கம் கை தூக்கி சொல்லும் "ஹாய்" ஆகிவிட்டது. தமிழை ஆங்கிலத்தில் பேசுகிறோம். அமுதை அமிலத்தில் கலக்குவது பாவமன்றோ?
நம் தனித்தன்மையை விட்டு அடுத்தவர் முறைதனை ஏன் காப்பி அடிக்க வேண்டும்? நாம் நம் அடையாளத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஓர் தவறான பாதையில் வெற்றி நடை போடுகிறோம்.
நாம் யார் என்பது பற்றி அறியாமை, நம் மூதாதையர் பற்றி அறிந்துகொள்ளும் அக்கறையின்மை, நம்மை பற்றி ஓர் உயர் மதிப்பு நமக்கே இல்லாமை என்பவை தான் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு காரணம். கழுவும் நம் கலாச்சாரத்தை விட்டு துடைக்கும் ஓர் கலாச்சாரத்திற்கு நம்மை அடகு வைப்பது சரியா?
இனியேனும் சிந்திப்போம்! நாம் சுதந்திரம் பெற்ற அந்நாளில் மகாத்மா துக்கத்தில் இருந்தார். இன்றும் அவர் ஆன்மா துக்கித்து தான் இருக்கிறது. நூறாவது வருடத்திற்குள்ளாவது திருந்துவோம். அவர் ஆன்மாவை மகிழ்விக்க உறுதி பூணுவோம். சுதந்திர நாளை உளப்பூர்வமாய் உணர்வுபூர்வமாய் கொண்டாடுவேம். இந்தியத்தாயின் பெருமை போற்றுவோம்.
இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துக்கள்.
வந்தே மாதரம்!
Subscribe to:
Posts (Atom)