Posts

Showing posts from June, 2011

மீண்டும் ஒரு ஜூன் 30!

"நேசமணி ராசாவுக்கும், கூட வந்த மேத்தனுக்கும் ஜே!" -- என்று எழுந்திடும் பெருங்குரல் விண்ணையே பிளந்திடும் என்று என் குடும்பத்துப் பெரியவர்கள் கூற நான் கேட்டதுண்டு. இந்த முத்திராவாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘நேசமணி ராசாவோடு உடன் வந்த மேத்தன்’ தான் என் வாப்பப்பா! என் தாத்தா. எங்களூர் பக்கம் முஸ்லிம்களை "மேத்தன்" என்றழைப்பது வழக்கம். என் தாத்தா, திரு. M.K பாவா அவர்கள், கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளத்திலிருந்து பிரித்து, தமிழகத்தோடு இணைக்க, மார்ஷல். நேசமணி நாடார் அவர்கள் தலைமையில் நடந்த போராட் -டங்களில், அவரோடு இணைந்து போராடியவர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் ஒரு முக்கியஸ்தர். அந்தப் போராட்டங்களின்போதுதான் நான் மேலே கூறிய முத்திராவாக்கியம் விண்ணதிரவைக்கும். என் தாத்தா ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. "திங்கள்" எனும் பெயரில் பத்திரிகையும் நடத்தியிருக்கிறார். தமிழ் வித்தகர். ‘கவிமணி’ தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் அருமைச் சீடர்களில் ஒருவர். தெளிந்த சிந்தனையாளர். பண்பாளர். சமூகத்தில் மதிப்போடும், மரியாதையோடும் வாழ்ந்தவர். த

ரஜினிகாந்த்!

" க மல் கூட கம்ப்பேர் பண்ணும்போது he is nothing! கமல் ஒரு பிறவிக்கலைஞன். ரஜினி கிறுக்கன். ஏதோ வந்து ஏதோ செஞ்சிட்டு போவான். அவனுக்கு நடிக்கவே தெரியாது!" என்பதுபோன்ற கருத்தையே அதிகம் கூறுவோரிடையே இருந்ததால்தானோ ஏனோ, இதுவே எனக்கும் ரஜினி குறித்தான அபிப்பிராயம் என்றாகிப் போனது. "நீ சின்னப்பையனா இருக்கறப்போ, 'நினைத்தாலே இனிக்கும்' படம் பாத்திட்டு அதுல கமல்ஹாசன் 'என்னடி மீனாட்சீ' பாட்டுக்கு ஆடறதைப்போல நீ எவ்வளோ அழகா ஆடி பாடுவே தெரியுமா?" -- என்று அம்மா அவ்வப்போது என்னிடம் சொல்லக் கேட்டிருந்ததால், கமல்பால் ஓர் ஈடுபாடு எனக்கும் ஏற்பட்டிருந்தது. கமல்ஹாசனை விரும்புதல் ஒரு படி மேல் என்பதுபோலவும், ரஜினியை விரும்புதல் ஒரு படி கீழ் போலவும் ஒரு அபிப்பிராயம் பொதுவாகவே நிலவி வந்தது. ஒரு முறை நண்பர்களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கையில், ரஜினிகாந்தைப் பற்றி யாரோ ஏதோ ஒரு கமெண்ட் அடிக்க, அப்போது தெருவோடு போய்க்கொண்டிருந்த ஒரு குடிகார வாலிபன் எங்களிடம் வம்புக்கு வந்தான். "ரஜினியப் பத்தி யார்ரா தப்பா பேசினது? மவனே, கொடல உருவி மாலையாப் போட்டிடுவேன் ஜாக்கிரதை"