Posts

Showing posts from August, 2007

சுதந்திர நன்நாள்!

அ றுபது ஆண்டு ஆயிற்று . நாம் சுதந்திரம் பெற்று . சுதந்திர நன்நாளில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்? விடுமுறை நாள் என்பதையும் தாண்டி எந்த விதத்தில் இந்த நாள் நம்மில் ஓர் தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது? இவை யாவும் சிந்தனைக்குறிய கேள்விகளே! அறுபது ஆண்டு சுதந்திர பாரதத்தில் மக்களின் இன்றைய நிலை என்ன? நாட்டின் நிலையும் தான் என்ன? அறுபதாண்டுகளாய் அழித்துக்கொண்டிருக்கிறோம் வறுமைக்கோடு இன்னும் அழிந்தபாடில்லை. அறுபதாண்டுகளாய் நாமே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறோம், உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படை கூட அனைவருக்கும் கிட்டியபாடில்லை. கல்வியில், மருத்துவ வசதிகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநிலை என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. சீனியர் சிட்டிசன் என அறியப்படும் முதியோருக்கு போதிய பாதுகாப்பு? என்பதில் அக்கறையும் அறவே இல்லை! நம்மை நாமே ஆளும்போதும் ஏன் இன்னும் அவல நிலை? இதற்க்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? மக்களா? ஆட்சியாளர்களா? சிந்திக்கையில் அனைவரும் தான் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஓட்டு, ஆட்சி, பதவி என்று ஆதாயம் எதையும் எதிர்பாராமல் நாடு, அதன் நலன், அடுத்த தலை