Posts

Showing posts from November, 2007

போக்கிரி வண்டு!

வணக்கம்! பசித்திருந்த ஒரு மதிய வேளையில் இசை கேட்டிருந்தது வண்டு! "போக்கிரி" படத்தின் "டோலு டோலு தான் அடிக்கறா" என்ற பாடலை கேட்டுக் கொண்டிருந்த போது சாப்பாடு வாசம் எங்கிருந்தோ வந்து மூக்கினை தாக்க.. இந்த மெட்டுக்கு பொருந்துமாறு சில வரிகள் வந்து விழுந்தது...! "வாசம் வாசமா வருகுதா - என் சுவாசம் மொத்தமும் மணக்குதா வயிறும் காஞ்சு தான் கிடக்குதா - கொஞ்சம் கஞ்சி கேட்டு தான் துடிக்குதா? சில வகைகள் மட்டும் தான் கிடைத்திடுமே வீட்டில் பல வகையில் பண்டங்கள் கிடைக்குமிடம் ஹோட்டல்! ஊத்தி அவிச்சது இட்லியா - அதை பரப்பி சுட்டது தோசையா! பொறித்து எடுப்பது பூரியா - அந்த உருளை கிழங்கு Gas தொல்லை! அடடா அடடா அட அடை இது தாண்டா! குடுடா குடுடா நீ சுட சுட போண்டா! இடுடா இடுடா வடை ரசத்தினில் இடுடா ஊறி திளைக்கும் அது ரசவடை தாண்டா! " இப்படி சில வரிகள் பல்லவிக்கு வந்து விழுந்த நிலையில் இந்த பாடலை முழுமையாக்க நினைத்த வண்டு எழுதிய சரணங்கள் கொஞ்சம் காதல் சில்மிஷத்துடன் அமைந்திட்டது. சில்மிஷ சரணத்துடன் பசி பல்லவி ஒட்டவில்லை. பசியின் அவதியை விட காதல் சில்மிஷங்கள் சுகம்

Not Interested in Movies - னு சொன்னா?

"Not Interested in Movies" என்பது சிலரின் கூற்று! அதில் அர்த்தம் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. திரைப்படங்களை மிகவும் விரும்பும் இந்த வண்டு என்பதால். திரைப்படங்கள் சார்பாக வாதாட பீஸ் இல்லாத வக்கீலாக ஆஜர் ஆகுகிறது வண்டு. ஏதொரு விருப்புக்கும் வெறுப்புக்கும் காரணம் உண்டு. அந்த காரணம் அறியாமல் உண்டாகும் விருப்பும் வெறுப்பும் அர்த்தமற்றது. [ பின்னுகிறேனா? ]. Not Interested in Movies என்று கூறுவது நான் சராசரிக்கும் ஒரு படி மேல் என்று காட்டிடத்தானோ? [ மிளகாய் பொடி தூவி சிலரின் கோவத்தை கிளறுகிறேனா? ]. சரி, ஏன் Not Interested என்று கேட்டால் அதற்கும் பதில் கூற சிலரால் முடிவதில்லை [ சே.. சே.. யாரையும் நான் குத்தி காட்டலேங்க...!] திரைப்படத்தை விடுங்கள் அந்த திரையிலேயே ஒரு மாபெரும் செய்தி அடங்கியுள்ளது. நல்லதாயினும், கெட்டதாயினும், காட்டப்படுவது எதுவாயினும் திரை தன் நிலை மாறுவது இல்லை. அது அதுவாகவே இருக்கிறது. [ இதுல என்ன சேதினு கேக்காதீங்க... ஒரு விஷயத்தை சொன்ன அனுபவிங்க.. ஆராயாதீங்க! ] திரைப்படங்கள் மனிதனை அல்ல மனங்களை படம் பிடிப்பவை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனை பொருத்தவரையில் ஒரு சரி உண