Posts

Showing posts from June, 2007

ஒட்டுவதே ஒட்டும்!

க ண் கண்டதும் மதி சொன்னதும் மனம் உணர்ந்ததும் - பொய்! கண் திரண்டதும் மனம் உடைந்ததும் நான் நொந்ததும் - மெய்! ---- 0 ---- சரி என்றே எண்ணி வந்தேன் சிலர் குறித்த புரிதல் தனை! அது சரி அல்ல என்றே அவர் கரி பூசிச் சென்றிட்டார்! எவர் எனக்கு அருமை என்று இருமாப்பு கொண்டேனோ? அவரே என் பெருமை மீது சேற்றினை இறைத்திட்டார்! --- 0 --- எல்லை உண்டென்று அறியாத பாவம் தொல்லை கொடுத்து விட்டேன்! உரிமை எடுத்து கண்டிக்கத் தான் சில சொல்லை உதிர்த்து விட்டேன்! உதிர்த்த சொல் சுட்டதென்றா இவர்கள் ஊமை என்றானார்கள்? - ஆயின் உண்மையை உரைக்கட்டும் எந்தச் சொல் சுட்டதென்று? ---- 0 ---- இடைவெளி கூடுதென்று இதயம் பதறியதால் அபயக் குரல் கொடுத்து - உறவை காத்திடத்தான் எத்தனித்தேன்! அதுவே தவறென்று ஆகிவிட்டால் என் செய்வேன்? இச்செயலே பிரிவுக்கு உரமாச்சோ? - துயர் கொண்டேன்! --- 0 --- அங்கங்கு காலம் ஓர் அடையாளம் காட்டும்! அறிகுறிகள் அறிந்து - நாம் தயாராக வேண்டும்! அன்றேல், எதிர்பாரா ஏமாற்றம் நமை வந்து சூழும் - அதில் பழங்கால இன்பமும் பழுதாகிப் போகும்! --- 0 --- அளவாய் எடுத்தும் அளவுக்குள் கொடுத்தும் பழகுதல் நன்று! தேவைக்கு மேல் என்றால் ஏது