Posts

Showing posts from 2011

மூக்குகுத்திப்'பூ'!

'சொத்' தென்று, என் மூக்கில் பலமாய் விழுந்தது குத்து ஒன்று! குத்து விழுந்த வேகத்தில், பளீரென ஓர் வெளிச்சக்கீற்று மின்னல்போல் தோன்றி மறைய, அதைத்தொடர்ந்து பல வண்ணங்களில் நட்சத்திரங்களும் மின்னி மறைய, நான் நிலைகுலைந்து, தள்ளாடி, அருகிலிருந்த சுவற்றைப் பிடித்துக்கொண்டு, சுவரோடு சுவராக சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். குத்து விழுந்த இடத்தில் அடர்ந்து பரவுகிறது நுட்பமாய் ஒரு வெப்பம். என் உதட்டின் மீது ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதாகத் தோன்ற, "என்ன அது?" என்று, அதை எடுத்துக்களைய எத்தனித்தால் என் கைகளுக்குள் சிக்காமல் நழுவுகிறது அது. அதைத் தொட்ட விரல்களில் பிசுபிசுப்பு! நிறமோ கருஞ்சிவப்பு! சுவையோ ஒருவிதத் துவர்ப்பு. அடடே!! குருதி? அருவி போல் குருதி ஒழுகிக்கொண்டிருக்க, மூக்கும் மூக்கும் சார்ந்த இடங்களும் உணர்வற்ற நிலையில் மரத்துப்போய் இருக்கிறது "மெத்" தென்று. நான் தலைகிறங்கி, தரையில் விழுந்தேன் 'தொப்' பென்று. என் இமைகள் தானாக மூடிக்கொள்ள, இரு விழிகளுக்குள்ளும் பரவி விரிகிறது கரிய இருட்டு. என்ன முயற்சித்தும், இருட்டினை விரட்டிட விழிகளைத் த