Posts

Showing posts from December, 2008
Image
சில்வண்டின் .., முதற்காதல் - பதினாறாம் நினைவு ! எ ன் முத ற் காதலே! ஆண்டுகள் பதினாறு ஆயிற்று இன்றோடு! நீ இறந்து! உன்மேல் காதல் எனக்கு பிறந்து! --- 0 --- மதிபோல் மலர் முகம் என் மதியில் மகரந்தம் தூவ! மயங்கி மருகி! ஊடுறுவி உருகி! இமை கொட்டாது உன் முகம் பார்த்தேன்! உணர்வுகளின் ஊற்று! உற்பத்தியாயிற்று! --- 0 --- --- 0 --- அங்கங்கள் ஒவ்வொன்றும் அழகுக்கு அர்த்தங்கள்! அங்கங்கு தங்கி நான் ஆராய்ந்தேன் அதில் ஆழ்ந்தேன்! செவி தந்தால் ஒன்றிரண்டு இரகசியமாய் சொல்லிடுவேன்! பூத்தார்போல் புன்னகைப்பாய்! அவ் வழகுக்காய் விழைகின்றேன்! --- 0 --- ஒரு புருவம் மேலுயர்த்தி வினாக்குறி என்றாக்கி ஆராய்ந்த தென்னவென்றா கண்ணாலே கேட்கின்றாய்? குறும்பே! அத்தனையும் கூறிவிடின் வெட்கத்தில் வெளறிடுவாய்! "ச்சீ " - யென்று பொய்யாக சினம் கொண்டு சிவந்திடுவாய்! உன் ரசிப்பை நான் ரசிக்க ஒன்றிரண் டு உரைத்தி ட வா? --- 0 --- பாற்கடல் சூழ கருங்கடல் கொண்டு அழகு சேர்த்திடும் ஆழி இரண்டு! அலையாய் இருள் அலையாய் இடை சாடும் நீர்வீழ்ச்சி! பழம் முந்தி வரும் விதையாய் வனப்பாய்... இரு வாசல் குகை ஒன்று! ரசம் த