Posts

Showing posts from January, 2007

துரியோ&CO vs பாண்டா பாய்ஸ்!

[மரத்தடி தமிழ் குழுமத்தில் மஹாபாரத கதாபாத்திரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற கர்ணன் மற்றும் துரியோதன சகோதரர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டது.] சி றுவயதில் கார்டூன் புத்தகங்கள் வழியாகத்தான் மஹாபாரதம் எனக்கு பரிச்சியமானது. பிறகு அப்பா ஒரு கோடை விடுமுறையின் போது படித்துகாட்டியதிலும், அறிஞர் பெருமக்களின் கருத்துகளிலிருந்தும், தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் பார்த்தவரை தொலைக்காட்சி தொடரிலிருந்தும் மஹாபாரதத்தை ஓரளவு தெரிந்துகொண்டேன். எனக்கும் கர்ணண் மீதுதான் பிடித்தம் அதிகம். கர்ணண் படமும் இதற்க்கு ஒரு காரணம். ஆனால் நான் அந்த படம் பார்த்ததில்லை. பிறெகெப்படி இந்தப்படம் காரணம் ஆனது என்று கேட்பீர்களேயானால், காரணம் அந்த பாடல். சீர்காழி அவர்களின் குரலில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" எனும் பாடல் தான் கர்ணணைப்பற்றி யோசிக்கவைத்து என்னை உருக வைத்தது. இப்போதும் அந்த பாடலை கேட்கையில் சிலநேரம் கண்ணீர் பெருகுவது உண்மை. மரத்தடியில் நாம் இப்போது மஹாபாரத கதாபாத்திரங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மஹாபாரதம் பற்றி என் மனதில் படிந்துபோன கருத்துக்களை, சில ஐயப்பாடுகளை உங்கள் முன் வைப்பத